Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.
சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆவணி மாத வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடந்தது.
கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வாணையருடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
சஷ்டி விரதம் அனுசரிப்போர், பக்தர்கள் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.